காஞ்சிபுரம், ஜூன். 16 –

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் தோட்டநாவல் பகுதியில் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய க.சுந்தர் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தியாவுக்கு பா.ஜ.க எதையும் செய்யவில்லை எனவும், திமுக ஆட்சி அமைத்த ஓராண்டில் தமிழகத்தில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. என்றும் தெரிவித்தார். மேலும், பெண்களுக்கு (குடும்ப தலைவிகளுக்கு) மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் பேசினார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி பெண்களுக்கு புடவை, முதியோர்க்கு மிதிவண்டி, மற்றும் பொதுமக்கு தென்னைகன்று உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டு மிகச்சிறப்பாக விழா நடைப்பெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here