திருவள்ளூர், சனவரி. 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற இந்தியாவின் 75-வது குடியரசு தின வரவேற்பு விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிப்புரிந்தவர்களுக்கு சுழற்கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதில் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான முப்படை வீரர் கொடிநாள் நிதி வசூலில் தமிழகத்திலயே திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த இலக்கான ரூ. 5,14,10,000 என்ற இலக்கை விட அதிகப்பட்ச நிதியாக ரூ. 5,33,99,000  வசூல் செய்து வழங்கிவுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் பிரபு சங்கருக்கு சுழற்கோப்பையினை வழங்கி அவரைக் கௌரவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here