சோழபுரம், செப். 08 –
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட பூதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு புரட்டாசி மாதம் வருடாந்திர பால்குட அபிஷேக ஆராதனை திருவிழா நடைபெற்றது.
வருடந்தோறும் நடைப்பெறும் இந்த புரட்டாசி மாத திருவிழாவில் ஸ்ரீமகாலட்சுமி அம்மனுக்கு பூதூர் கிராம மக்களின் சார்பில் 108 பால்குடம் எடுத்து வரப்பட்டு அக்கிராமத்து பெண்கள் அம்மனை வழிபாடு செய்வது வழக்கமாகும்.
அந்நாளில் அவ்வூர் கிராம பெண்கள் விரதம் இருந்து, பால்குடங்களை பம்பை உடுக்கை மேளம் முழங்க தலையில் சுமந்து கிராமம் முழுவதும் சுற்றி வந்து தங்கள் வேண்டதல்களை நிறைவேற்றும் முறையினை அவர்கள் காலம் காலமாக செய்து வருகின்றனர்.
இந்நிகழ்வின் போது திரளான அக்கிராமத்து மக்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று அம்மனுக்கு செலுத்தப்படும் 108 பால்குட அபிஷேகத்தை கண்டு பயபக்தியுடன் அம்மன் அருள் வேண்டி தரிசனம் செய்தனர்.