தஞ்சாவூர், ஏப். 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹீமாயூன் தனது கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து காசநாடு, கோவிலூர், நடுவூர் உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது நடுவூர் ஏரிக்கரை கிராமத்தில் உள்ள அருள்மிகு. அக்னி காளி அம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மனை வழிபட்டார். தொடர்ந்து வேட்பாளரும், அவருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பெண்களும் தலையில் பச்சை துண்டு கட்டி கொண்டு அப்பகுதியில் வயலில் நடவு பணியில் ஈடுபட்டு இருந்த பெண்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரித்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து நாற்று வாங்கிய வேட்பாளரும், பெண் தொண்டர்களும் நாட்டுப்புற பாடல் பாடிக் கொண்டே நாற்று நட்டனர். வேட்பாளர் ஹுமாயூன் வயலில் டிராக்டர் ஒட்டி உழவு பணியில் ஈடுபட்டார். விவசாய பணியில் ஈடுபட்ட பெண்களின் கைகளை பற்றி கொண்டு தனக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here