திருவாரூர், ஜூன். 20 –

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, எரவாஞ்சேரி அருகே மணவாளநல்லூர் கீழத் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் – பூங்கோதை, இவர்களின் மகன் 29 வயதுடைய சந்தோஷ். நேற்றுக் காலை சந்தோஷ் அவரது நாயுடன் வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்பொழுது வீட்டின் அருகிலேயே சந்தோஷ்  மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன், மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி சந்தோஷ் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது 15 நாட்களுக்கு முன் வேறொரு வழக்கில் சிறை சென்று நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள சந்தோஷ்  எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்..

இந்த நிலையில் சந்தோஷ் நேற்று காலையில் மணவாளநல்லூர் கீழத் தெருவில் உள்ள அவரது வீட்டு அருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இப் படுகொலையில் சுமார் ஐந்து பேர் கொண்ட மர்ம நபர்கள் ஈடுப்பட்டதாகவும், மேலும் அவர்கள் இண்டிகா காரில் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளதாக கூறும் நிலையில், சந்தோஷ் வீட்டருகே அதே பகுதியை சேர்ந்த விக்கி என்பவர் மீது சந்தேகப்பட்டு அவர் வீட்டில் இல்லாத நிலையில்.. அவரின் தாயாரை எரவாஞ்சேரி காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், உழிரிழந்த சந்தோஷின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.தொடர்ந்து இக்கொலைக் குறித்து எரவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here