கும்மிடிப்பூண்டி, பிப். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் …

தமிழ்நாட்டில் அரசுக் கொண்டு வந்துள்ள பல்வேறு மக்கள் வளர்ச்சிப் பணிகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது ஆதலால் திமுக தலைமையிலான இந்தியாக் கூட்டணி முழுமையான வெற்றியை வென்றெடுக்கும் என சபாநாயகர் அப்பாவு கும்மிடிப்பூண்டியில் செய்திகளுக்கு பேட்டியளித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற தனியார் தொழிற் சாலை திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த தமிழ்நாடு சட்டப் பேரவை சபாநாயகர் அப்பாவு அந்நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில், பெட்ரோல், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டு வரும் நிலையில், அதனை எதிர் கொள்ளும் பொதுமக்கள் படும் துயரத்திற்கு பின்பும் மீண்டும் மக்கள் பாஜகவிற்கு வாக்களிப்பார்களா? என்றவாறு செய்தியாளர்களிட்மெதிர் கேள்விக் கேட்டார். தொடர்ந்து வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என்பதை எப்படி நம்ப முடியும்? அங்கும் பல்வேறு அரசியல் மாற்றங்கள் மற்றும் அம் மாநிலமக்கள் கடந்த பத்தாண்டு ஆண்டுகளில் பாஜக அரசால் ஏற்பட்டுள்ள பல்வேறு துன்ப நிலைக்குறித்து தற்போது அம்மக்களும் உணரத் தொடங்கி விட்டனர் எனவும், மேலும் வட மாநிலங்களில் பாஜக மீண்டும் வெற்றி பெறும் என்பதற்கான அடிப்படை தகவல்களும் ஏதுமில்லையென அப்போது தெரிவித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில், அரசுக் கொண்டு வந்துள்ள பல்வேறு மக்கள் வளர்ச்சிப் பணிகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதெனவும் அதனால் திமுக தலைமையிலான இந்தியாக் கூட்டணி மகாத்தான வெற்றியினை முழுமையாக வென்றெடுக்கும் என்றவாறு அப்போது அவர் தெரிவித்தார்.

முன்னதாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் புதிய தொழிற்சாலை ஒன்றை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது தமிழ்நாட்டில் சிறு குறு தொழில் தொடங்குவதற்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது எனவும், இயந்திரங்கள் வாங்கிட தமிழ்நாடு அரசு சார்பில் 25% மானியம் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் சட்டசபையில் எதிர்கட்சி துணை தலைவர் நாற்காலி தொடர்பாக பிரச்சனை இல்லை எனவும், எதிர்கட்சி தலைவர் நாற்காலியை தவிர பிற இடங்கள் ஒதுக்குவது சபாநாயகரின் உரிமை என ஏற்கனவே முன்னாள் சபாநாயகர் தனபால் கூறியுள்ளதை அப்பாவு நினைவு படுத்தினார். மேலும் ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்கிறது எனவும், ஆனால் விவசாய கடன், மாணவர் கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது என குற்றம் சாட்டினை எழுப்பினார்.

மேலும் உலக பணக்காரர் வரிசையில் உள்ள அதானிக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி தேவையா என கேள்வி எழுப்பிய அப்பாவு, நலிந்த நிலையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என அப்போது அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது குஜராத் என்ன பிச்சைக்கார மாநிலமா என ஒன்றிய அரசைப்பார்த்துக் கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது மாநிலங்களுக்கு தேவையான நிதியினை முறையாக வழங்கினாரா எனவும் வினாவினார்.

தேர்தல் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அப்பாவு தமிழ்நாட்டில் அரசுக் கொண்டு வந்துள்ள பல்வேறு மக்கள் வளர்ச்சி பணிகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது எனவும் அதனால்  திமுக தலைமையிலான இந்தியக் கூட்டணி முழுமையாக வெற்றியை வென்றெடுக்கும் என நம்பிக்கையுடன் அப்பாவு தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here