புதுச்சேரி, மார்ச். 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்

புதுச்சேரியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் நமச்சிவாயம் சென்னையில் இருந்து இன்று புதுச்சேரி திரும்பினார், அவருக்கு பாஜக தொண்டர்கள் கருவடிகுப்பம் பகுதியில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர், அதனைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள அப்பா பைத்தியசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த நமச்சிவாயம், முதலமைச்சர் ரங்கசாமியிடம் ஆசி பெற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி,

புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக நமச்சிவாயத்தை அறிவித்த பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு தான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், மேலும் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நமச்சிவாயம் வெற்றி பெறுவார் எனவும்அப்போது தெரிவித்தார்.

மக்களவை தேர்தலுக்காக பாஜக அறிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் புதுச்சேரிக்கு பொருத்தும், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புதுச்சேரி மக்களுக்கு சென்றடைந்துள்ளது, தாமரை சின்னம் மக்களின் மனதில் வேரூன்றியுள்ளது ஆதலால் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் புதுச்சேரி மக்களின் பேராதரவுடன் மிகப்பெரிய வெற்றி பெறுவேன், பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை புதுச்சேரிக்கு பெற்று தருவேன், கடந்த 25 ஆண்டுகளாக மாநில அரசியலில் மக்கள் பணியாற்றி வந்த என்னை பிரதமர் தேசிய அரசியலுக்கு அழைத்ததால் தற்போது அங்கு செல்கிறேன், கடந்த 3 ஆண்டுகளில் புதுச்சேரி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம், மக்கள் மீண்டும் மோடியை விரும்புகின்றனர் அதனால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றவர் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்றார்.

 

பேட்டி :

1.ரங்கசாமி – முதலமைச்சர், புதுச்சேரி

 

  1. நமச்சிவாயம் – பாஜக, வேட்பாளர்..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here