திருவாரூர், ஏப். 10 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …

திருவாரூர் மாவட்டம் மற்றும் ஒன்றியத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இன்று வெளியான கள்வன் எனும் திரைப்படம் அந்நகரில் உள்ள திரையரங்கில் இன்று வெளியானது.

அத் திரைப்படத்தைக் காண அவ்வூரில் வசிக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலானவர்கள் ஆர்வத்துடன் திரளாக வந்து  காண வந்தததால். அந் நடிகரின் தந்தை மூர்த்திக்கு சொல்லொன்னா மகிழ்ச்சி உள்ளக் கிடங்கில் இருந்து பொங்கியது.

மேலும் அவ்வுணர்வினை வெளிப்படுத்திய அவர் தாங்கள் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள் எனவும் மேலும், சிற்றூரில் வசிப்பவர்கள் எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

இருப்பினும் தனது மகன் அதனையெல்லாம் தாண்டி இன்று திரைத்துறையில் சாதித்து மற்றவர்கள் பாராட்டும் நிலைக்கு உயர்ந்து இருப்பது தனக்கு உள்ளபடியே பெருத்த மன நிறைவைத் தருவதாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தனது மகன் ஆரம்பக் காலக் கட்டத்தில் சின்னத்திரையில் பிரபலமடைந்து அதன் மூலமாக வெள்ளித்திரைக்கு வந்து தொடர்ந்து பல்வேறு வெற்றித் திரைப்படங்களில் நடித்து அத்திரையுலகில் தன்னை நிலை நிறுத்தியிருப்பதும், மேலும் அவர் தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து நல்லப் புகழை அடைய வேண்டும் என்பது தமது உள்ளத்து ஆசை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பலரும் தமது மகனைப் போல், அத்துறையில் இன்றளவு வரைப் போராடி வரும் அனைவரும் தங்கள் திறன்களை வெளிக்கொண்டு வந்து வெற்றிப்பெற வேண்டுமென வாழ்த்து வதாகவும் அப்போது அவர்  தெரிவித்தார்.

மேலும் தனக்கு ஏற்பட்டுள்ள அளப்பரிய மகிழ்ச்சியில் வார்த்தைகளை வெளிப் படுத்த முடியவில்லை எனவும் மற்ற விவரங்களை அத்திரைப்படத்தைக் காண வந்துள்ள தமது சொந்தவூர் மற்றும் அம்மாவட்டத்தை சார்ந்த மக்களிடம் கேட்டு அப்படத்தின் தரம் மற்றும் தனது மகனின் நடிப்பினை கேட்டு அறிந்துக் கொள்ளுமாறு தெரிவித்தார்.

தீனா என்பவர் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம் கூடுரை சேர்ந்தவர், இவர் முதன் முதலாக விஜய் டிவியில் தனது நடிப்புலக வாழ்விற்கான அடித்தளத்தை பல்வேறு கடின முயற்ச்சிக்கு பின்பு அதில் கால் பதித்தவர்.

பின்பு படிப் படியாக அச்சின்னத்துறையில் தனக்கான இடத்தினை பிடித்தவாறு தொடர்ந்து, வெள்ளித்திரையில் இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் ஒரு முக்கிய கதாப் பாத்திரத்தில் கைதி எனும் படத்தில் நடித்து தனது தனித்திறனை வெளிப்படுத்தியவர்.

அதனைத் தொடர்ந்து அவர் பல வெற்றிப்படங்களிலும் நடித்து வந்த நிலையில் இன்று அவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளி வந்துள்ள கள்வன் திரைப்படம் அவர் சார்ந்த மாவட்டத்தில் உள்ள திரையரங்கில் வெளியாகிவுள்ளது.

அதனைக் காண அவரது குடும்பத்தார் மட்டுமல்லாது உறவினர்கள் மற்றும் தீனனின் சொந்த ஊரான கூடுரை சார்ந்த ஊரார்கள் என திரளானவர்கள் அத்திரைப்படத்தைக் காண அத்திரையரங்கிற்கு வந்தனர்.

முன்னதாக அத்திரைப் படத்தை வரவேற்றும் மேலும் அத்திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியடவும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து திரையரங்கின் வளாகத்தில் அவரின் ரசிகர்கள் பிளக்ஸ் பேனர்கள் கட்டினார்கள்.

மேலும் இந்நிலையைப் பார்க்கும் போது என் மகன் தன்னை எவ்வளவு  பெருமைப் பட வைத்துள்ளார் என தெரிய வருகிறது என நா தழு தழுக்க தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here