கும்பகோணம், மே. 18 –
கும்பகோணம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட ஜெகநாத பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணிக்காக தொழிலதிபர் ராயா சில்க் கோவிந்தராஜ் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்பிற்கான பங்குத்தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி துணை மேயர் மற்றும் திமுக ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஆகியோரிடம் வழங்கினார்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நீர் நிலைகளை சீர் செய்தல், சாலை அமைத்தல், போன்ற பணிகளுக்கு பொதுமக்கள் சார்பில் 25 சதவீத தொகை வழங்கப்பட்டால் ,75 சதவீத தொகையை அரசு அத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கும் அத்திட்டத்தின் கீழ் கும்பகோணம் மாநகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட ஜெகநாத பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் ராயா சில்க் கோவிந்தராஜ் தான் வசிக்கும் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணிக்காக ரூ. 5 லட்சம் மதிப்பிலான காசோலையை மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோரிடம் வழங்கினார். உடன் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.