கும்பகோணம், டிச. 28 –
கும்பகோணம் அருகே மருதாநல்லூரில் வீட்டின் அருகிலிருந்த முள்வேலி கட்டப்பட்டிருந்த கருங்கல் தூண் 7 வயது சிறுமி மேல் விழுந்ததில் சிறுமி உயிரிழந்தார். இச்சோக நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே மருதாநல்லூர் சௌபாக்கியா நகரைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது இரண்டாவது மகள் பிருந்தா (7). தனியார் பள்ளியில் 3 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள காலி மனை பகுதியில் பிருந்தா விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு அமைக்கப்பட்டிருந்த முள் கம்பிவேலிக்கான கருங்கல் ஒன்று எதிர்பாராத விதமாக பிருந்தா மீது விழுந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த. பிருந்தா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார்கோவில் காவல்துறையினர் இவ்விபத்துக் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சோக சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.