பொன்னேரி, மே. 02 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூர் கூட்டு சாலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் .பி.பலராமன் தலைமை வகித்தார். எல்லாபுரம் ஒன்றிய அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். விஜயகுமார், சோழவரம் ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.பிரகாஷ். மாவட்ட பொறுப்பாளர்கள் அவைத்தலைவர் பொன்னுதுரை. இணைச்செயலாளர் புனித் ராஜ்குமார் .துணை செயலாளர் என் .ஸ்ரீதர் .மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பி.டி பானுபிரசாத். மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ். பொன்னேரி தொகுதி பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் முத்துக்குமார் .பொன்னேரி நகர கழக செயலாளர் செல்வகுமார். மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் பட்டாபிராமன் உள்ளிட்டோர் வரவேற்புரை நல்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக கழக வர்த்தக அணி செயலாளாளரும்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான. வி.என்.பி. வெங்கடராமன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சி என்றும். கடந்த ஆண்டில் அம்மா கிளினிக் என்று அதிமுக அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வந்தது. அதனையே நாளடைவில் முறையாக செயல்பட விடாமல் தொலைத்து விட்டது என்றும் .மீண்டும் தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சி மிக விரைவில் வரும் என்று பேசினார்.

இதில் கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் பொன்ராஜா. கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பஞ்சட்டி நடராஜன். மீஞ்சூர் நகர கழக அவை தலைவர் வழக்கறிஞர் மாரி. மீஞ்சூர் நகர துணைச் செயலாளர் எம் .வி .தமிழரசன் .கல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்கா துரைராஜ். வைரம் குப்பம் சிவா. உள்ளிட்ட திரளான அதிமுக கட்சித் தொண்டர்களும். மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் சோழவரம் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஜெ. சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here