கும்பகோணம், செப் . 24 –

திருவண்ணாமலை அருகே திருக்கோவிலூரை சேர்ந்த வெங்கடேசன் வயது 34 இவர் இயற்கை எரிபொருள் மற்றும் உர உற்பத்தி நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாக வேலை வேலை செய்கிறர். தொழில் தொடர்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த அன்பு என்பவரை சந்திக்க நேற்று இரவு கும்பகோணம் வந்துள்ளார் .

கும்பகோணம் அருகே மணஞ்சேரி கிராமத்தில் வெங்கடேசன் அவரது நண்பர் அன்பும் நேற்றிரவு மது அருந்தியதாக கூறப்படுகிறது. தாங்கள் மது அருந்தி கொண்டிருக்கும்  இடத்திற்கு வரவேண்டுமென வெங்கடேசன் தனது மற்ற நண்பர்களான காண்டீபன், ராஜாராம் ,ரவிகிரன் ஆகியோருக்கு இருப்பிடம் குறித்து குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார் .

இன்று மதியம்வரை வெங்கடேசனையும், அன்பு என்பவரையும் தொடர்பு கொள்ள முடியாததால் நேற்று இரவு வெங்கடேசன் அனுப்பிய குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர் அப்போது காவிரி ஆற்றில் வெங்கடேசன் இறந்து கிடப்பது தெரியவந்தது.

 இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆற்றில் மிதந்த வெங்கடேசின் உடலை எடுத்து பார்த்த பொழுது கழுத்து அறுக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வெங்கடேசன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வெங்கடேசுவுடன்  மது அருந்திய நண்பர் அன்பு தலைமறைவாகி விட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here