கும்பகோணம், டிச. 18 –

கும்பகோணம் அருகே பாபநாசம் ஒன்றியம் அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் அருகே, பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பொட்டாஷ், டிஏபி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உரகடைகளிலும் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், உரவிலை உயர்வை கட்டுப்படுத்திட தமிழகஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கம் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட, ஒன்றிய. நகர நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி  பொட்டாஷ் உரங்கள் மற்றும் விவசாய நாற்றுகளை கையில் ஏந்தியபடி முழக்கங்கள்  கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

 

பேட்டி..

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்..

மாநில பொதுச் செயலாளர்…

பிஎஸ் மாசிலாமணி…

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here