புதுச்சேரி, மே. 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …

புதுச்சேரியில் கார் மெக்கானிக் ஒருவரிடம் மது போதையில் வந்த வாலிபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் உட்பட்ட ஆத்துவாய்க்கால்பேட் பாத்திமா நகரில் வசித்து வருபவர் முகமது கவுஸ் கார் மெக்கானிக்கான இவர் அவரது வீட்டு அருகே ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்றைய முன்தினம் மாலை அவர் தனது ஒர்க் ஷாப்பில் அவர் காரைப் பழுது பார்த்து கொண்டிருந்த போது, அங்கு மது போதையில் கையில் பீர் பாட்டிலுடன் வந்த அதேப் பகுதியை சேர்ந்த தவி மற்றும் முரளி என்கிற வாலிபர்கள் கவுஸிடம் சென்று ஏன் வாகனத்தை ரோட்டில் நிறுத்தி பழுது பார்க்கிறாய் என கேட்டு அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.

அப்போது வாகனங்கள் ஓரமாகதான் நிற்கிறது என்று கவுஸ் கூற,  இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தவி கார் மெக்கானிக் கௌசை தாக்கி உள்ளார். தொடர்ந்து  முரளி தன் கையில் வைத்திருந்த பீர்பாட்டில் மற்றும் இரும்பு ராடால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு அடுத்த முறை வரும் போது வாகனங்கள் சாலையில்  இருந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

அதில் காயமடைந்த கவுஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், அப்பிரச்சினைக் குறித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் கவுஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தவி மற்றும் முரளியை தேடி வருகின்றனர். மேலும் இருவரும் கவுஸை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here