காஞ்சிபுரம், ஜன. 27 –
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, பெருநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி தேர்தல் தேதியை நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
இந்த நிலையில் நாளை முதல் வேட்பாளர்களின் விருப்ப மனு பெறப்படவுள்ள சூழ்ழிநிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவகத்தில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவகத்தில் விருப்ப மனு வழங்க எட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாநகராட்சியை பொருத்தவரை (நாராயணன்) ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் எட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் ஆண் வாக்காளர்கள் 1.05.688 பேரும் பெண் வாக்காளர்கள் 1.23.205 பேரூம் மூன்றாம் பலினம் 28 பேரும் மொத்தம் 2.18.901 வாக்காளர்கள் இருப்பதாக காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்தனர்.