மீஞ்சூர், மார்ச். 20 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு பகுதியில் உள்ள நேதாஜி நகரில், உதவும் கைகள் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர்.சு. குணசேகரன் தலைமை வகித்தார். பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர். மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, மீஞ்சூர் பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ். அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணை தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல். நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன். உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும், இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு முதியோர் இல்லத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் இதில் அத்திப்பட்டு புருஷோத்தமன். சமூக ஆர்வலர் தாஸ். ரவி. மகி. பட்ட மந்திரி பாபு. உள்ளிட்டவர்களும், திரளான அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here