காஞ்சிபுரம், ஏப். 23 –
காஞ்சிபுரம் மாநகராட்சி 32 வார்டு பகுதிக்கு உட்பட்ட நாகளுத்து தெரு, கோட்ராம்பாளையம் தெரு, மந்தவெளி, நாகளுத்து பின் தெரு, அஷ்டபுஜ பெருமாள் கோவில் மாடவீதி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இரவு நேரங்களில் மர்ம நபர் ஒருவர் தெருக் குழாய்களில் உள்ள இரும்பு குழாய்களை திருடும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் அஷ்டபுஜம் தெற்கு மாட வீதியில் உள்ள இரும்பு குழாய் திருடுப் போயிருந்துள்ளதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் மூலம் இரும்பு குழாய்களை திருடும் மர்மநபரின் உருவக்காட்டி அதில் பதிவாகியுள்ளது. தன் மூலம் அந்த தேடி வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக காஞ்சிபுரத்தில் இரவு நேரத்தில் தெரு குழாய் திருடும் சிசிடிவி வீடியோ காட்சி மூலம் விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.