பொன்னேரி, மார்ச். 30 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பொறியாளர்கள் பொன்னேரி அங்கன்வாடி மைய அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அப்போது காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் . 10 ஆண்டுகளாக பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மேலும் தமிழக அரசு அளித்ததேர்தல் வாக்குறுதியின்படி   உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கங்களை எழுப்பி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்க மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் ரகுமாபி, பொருளாளர் பூங்கொடி, மாவட்ட இணை செயலாளர் ஸ்ரீதேவி மற்றும் மீஞ்சூர் வட்டார அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here