தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வருகைதந்த தமிழ்மாநில காங்கிரசின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர், சமீபத்திய மழையினால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு போன்ற மானாவாரி பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கர்நாடகா அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கிறது.
நமக்கு உரிய தண்ணீரை விரைவாக கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் கர்நாடக அரசு மேகதாது அணைக்கட்டும் முயற்சிகளை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அப்போது தெரிவித்தார்.
மேலும் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.