காஞ்சிபுரம், மார்ச். 06 –

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ளது பினாயூர்  கிராமம். இக்கிராமத்தில் பிரசித்திபெற்ற 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த திருக்கோயில் திருப்பணிக் குழுவால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ. 20 லட்சம் செலவில் திருப்பணிகள் நிறைவடைந்து இன்று காலை 10-மணியளவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து  முதல் கால யாக சாலை பூஜை, 2-ம் காலம் என மொத்தம் 5 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

கும்பாபிஷேக நாளான இன்று யாக சாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலகமாக கோவில் கோபுரத்திற்கு எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் பினாயூர், குருமஞ்சேரி, சாத்தனஞ்சேரி, சீட்டணஞ்சேரி மற்றும் பழவேரி ஆகிய கிராமங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சாலவாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here