திருவாரூர், ஜூன். 02 –
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பது மகன் பாபு வயது 23 இவர் டாட்டா ஏசி டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்ததால், அச் சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுக் குறித்து தாய் தந்தையிடம் கூறியதை தொடர்ந்து, தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் இளைஞர் பாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு அவரை போலீசார் செய்து கைது செய்துள்ளனர்.