திருவள்ளூர், ஆக. 10 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி, அத்திப்பட்டு முதல் பொன்னேரி வரை 75 வது சுதந்திர தின பொன்விழாவை முன்னிட்டும், விலைவாசி ஏற்றத்தை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் தலைமையில் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், மாநில துணைத் தலைவர்கள் சதா சிவலிங்கம், வழக்கறிஞர் சம்பத், வட்டாரத் தலைவர்கள் துரைவேல் பாண்டியன், ஜலந்தர், கார்த்திகேயன், கோவிந்தராஜ், ஐ.என்.டி.யு.சி. மாநிலத் துணைத் தலைவர் எம்.பி.தாமோதரன், மாநில மீனவரணி பழவை ராஜீவ்காந்தி, மாவட்ட நிர்வாகிகள் பழவை பழனி, யுகந்தர், கோவர்த்தனன், கம்மார்பாளையம் சந்திரசேகர், ஆண்டிக்குப்பம் சஞ்சைகாந்தி, வட்டார நிர்வாகிகள் அன்பரசு, சுகுமார், புருஷோத்தமன், பசியாவரம் சேகர், காட்டுப்பள்ளி சரவணன், திருப்பாலைவனம் வினோத், ஜனப்பன் சத்திரம் எம்.ஆர்.கே.பாலாஜி, மீஞ்சூர் காமராஜ், அனுப்பம்பட்டு சாம்ராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் இதில் கலந்து கொண்டனர்.

முன்னதாக அத்திபட்டு இரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் .மற்றும் ராஜுவ்காந்தி சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு பாதையாத்திரை துவங்கியது.

அதனை தொடர்ந்து மீஞ்சூர் பஜாரில் கொடியினை ஏற்றி வைத்தார். அரியன்வாயல் பகுதிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாதயாத்திரை தேவதானம் வழியாக சென்று பொன்னேரி பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தது. அங்கு பொதுமக்களின் மத்தியில் தெருமுனை கூட்டமும் நடைபெற்றன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here