திருமுல்லைவாயில், மார்ச். 14 –

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வசிக்கும் மஞ்சுளா  என்பவரின் டியோ இரண்டு சக்கர வாகனம்  கடந்த 23- தேதி இரவு வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு 24தேதி காலை பார்த்த போது காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் மஞ்சுளா புகார் அளித்தார். அப் புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து அயப்பாக்கம் பகுதியில்  உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஆவடி காமராஜ் நகர் ராமலிங்க புரத்தை சேர்ந்த அகில் குமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து டியோ இருசக்கர வாகனம் மற்றும் திருவேற்காட்டில் சில நாட்களுக்கு முன் காணாமல் போன யமஹா R15 ஆகிய இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here