திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய சரகங்களில் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டு வந்த நபர் கைது அவரிடம் நகை மற்றும் பணம் பறிமுதல் செய்து போலீசார் நிதிமன்ற காவலில் அடைத்தனர்.

 திருவள்ளூர்; அக.13-

திருவள்ளூர் மாவட்டத்தில் நகர காவல் நிலையம், ஊத்துக்கோட்டை பொன்னேரி, மற்றும் வெள்ளவேடு காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஓ.ஜி. குப்பம் பாப்பையா என்பவரின் 44 வயது மகனான கிருஷ்ணா என்பவரை  மாவட்ட காவல் கண்காணிப்பளர் அரவிந்தன் உத்திரவின் பேரில் ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் படியும் ஊத்துக்கோட்டை வட்ட காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து அவரை கடந்த அக் 11 அன்று அவரை பிடித்தனர். பின்பு அவரிடம் களவு போன 25 பவுன் நகை மற்றும் ரொக்க பணம் ரூ.3.45 இலட்சத்தை கைப்பற்றி நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here