பொன்னேரி, அக். 20 –
திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி வழியாக கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் அப்பகுதியில் காவல்துறையினர் முகமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதோடு அவ்வப்போது பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் கடத்தி வரப்படும் கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தல் காரர்கள் மீது கைது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆந்திர மாநிலம் சத்தியவேடு மார்க்கமாக தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து பொன்னேரி வருவாய் கோட்ட துணை ஆட்சியர் ஐஸ்வர்யா தமிழக எல்லையான பொம்மாசி குளம் பகுதியில் ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.
கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக துணை ஆட்சியர் ஒருவரே நேரடியாக களத்தில் இறங்கி வாகன சோதனையில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.