திருவள்ளூர், மே. 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைப்பெற்ற கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திரைப்பட நடிகர் தாடி பாலாஜி அதனை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்.

திரைப்பட நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து 937 வது நாளாக காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து  தமிழக வெற்றிக்கழகம் இளைஞர் அணி சார்பில் கோடையில் மக்களை குளிர்விக்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் தாடி பாலாஜி கலந்துக்கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து  திருவள்ளூர் அடுத்து பெரிய குப்பம் பகுதியில் அமைந்துள்ள வெற்றிக்கழக மேற்கு மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த நடிகர் தாடி பாலாஜியை அங்கிருந்த வெற்றிக் கழக தொண்டர்கள் சால்வை அணிவித்தும் மாலை அணிவித்தும் வரவேற்று தாடி பாலாஜியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here